
முன்னதாக கடந்த 14-ந்தேதி விடுமுறை தினமாக இருந்ததால் ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்நிலையில் நேற்று மாலை காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் சில பக்தர்கள் அக்னி சட்டி, அலகு குத்துதல், பால்குடம் எடுத்து வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனும் செலுத்தினர். முத்தாலம்மன் கோவிலில் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அங்கிருந்து வந்து நகைக்கடை பஜார், கொப்புடையம்மன் கோவில் வீதி, 2-வது பீட் சாலை, செக்காலை சாலை வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு நேர்த்திக்கடன் செலுத்திய பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று(புதன்கிழமை) நடைபெறும் பால்குட விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையடுத்து கோவில் முன்பு பூக்குழி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார், உதவி ஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி, கோவில் கணக்கர் அழகுபாண்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.