என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காரைக்குடி முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
Byமாலை மலர்17 March 2021 8:47 AM GMT (Updated: 17 March 2021 8:47 AM GMT)
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவின்போது பக்தர்கள் முளைப்பாரி மற்றும் அக்னிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி-பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இந்த விழா கடந்த 9-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக பால்குட திருவிழா இன்று நடைபெறுகிறது. முன்னதாக பால்குடம், அக்னிச்சட்டி, அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்தல், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்த உள்ள பக்தர்கள் கோவிலில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர்.
முன்னதாக கடந்த 14-ந்தேதி விடுமுறை தினமாக இருந்ததால் ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்நிலையில் நேற்று மாலை காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் சில பக்தர்கள் அக்னி சட்டி, அலகு குத்துதல், பால்குடம் எடுத்து வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனும் செலுத்தினர். முத்தாலம்மன் கோவிலில் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அங்கிருந்து வந்து நகைக்கடை பஜார், கொப்புடையம்மன் கோவில் வீதி, 2-வது பீட் சாலை, செக்காலை சாலை வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு நேர்த்திக்கடன் செலுத்திய பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று(புதன்கிழமை) நடைபெறும் பால்குட விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையடுத்து கோவில் முன்பு பூக்குழி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார், உதவி ஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி, கோவில் கணக்கர் அழகுபாண்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த 14-ந்தேதி விடுமுறை தினமாக இருந்ததால் ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்நிலையில் நேற்று மாலை காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் சில பக்தர்கள் அக்னி சட்டி, அலகு குத்துதல், பால்குடம் எடுத்து வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனும் செலுத்தினர். முத்தாலம்மன் கோவிலில் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அங்கிருந்து வந்து நகைக்கடை பஜார், கொப்புடையம்மன் கோவில் வீதி, 2-வது பீட் சாலை, செக்காலை சாலை வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு நேர்த்திக்கடன் செலுத்திய பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று(புதன்கிழமை) நடைபெறும் பால்குட விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையடுத்து கோவில் முன்பு பூக்குழி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார், உதவி ஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி, கோவில் கணக்கர் அழகுபாண்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X