என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில்
    X
    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில்

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று வண்டியோட்டம்

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று (புதன்கிழமை) வண்டியோட்டம் (வெள்ளோட்டம்) நடக்கிறது. இதில் தூக்க ரதத்தில் இரண்டு பூசாரிகள் ஏற்றப்பட்டு கோவிலை சுற்றி ஒருமுறை வலம் வருவார்கள்.

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் மீனபரணி தூக்க திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், அம்மன் எழுந்தருளுதல், தூக்கக்காரர்களின் நமஸ்காரம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் நடக்கிறது. இதையொட்டி முன்னோட்டமாக இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு வண்டியோட்டம் (வெள்ளோட்டம்) நடக்கிறது. இதில் தூக்க ரதத்தில் இரண்டு பூசாரிகள் ஏற்றப்பட்டு கோவிலை சுற்றி ஒருமுறை வலம் வருவார்கள்.

    இந்த நிகழ்வை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×