என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று வண்டியோட்டம்
Byமாலை மலர்17 March 2021 8:42 AM GMT (Updated: 17 March 2021 8:42 AM GMT)
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று (புதன்கிழமை) வண்டியோட்டம் (வெள்ளோட்டம்) நடக்கிறது. இதில் தூக்க ரதத்தில் இரண்டு பூசாரிகள் ஏற்றப்பட்டு கோவிலை சுற்றி ஒருமுறை வலம் வருவார்கள்.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் மீனபரணி தூக்க திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், அம்மன் எழுந்தருளுதல், தூக்கக்காரர்களின் நமஸ்காரம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் நடக்கிறது. இதையொட்டி முன்னோட்டமாக இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு வண்டியோட்டம் (வெள்ளோட்டம்) நடக்கிறது. இதில் தூக்க ரதத்தில் இரண்டு பூசாரிகள் ஏற்றப்பட்டு கோவிலை சுற்றி ஒருமுறை வலம் வருவார்கள்.
இந்த நிகழ்வை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X