என் மலர்
ஆன்மிகம்

சிம்ம வாகனத்தில் கோதண்டராமர்
பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: சிம்ம வாகனத்தில் கோதண்டராமர்
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று சிம்ம வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஊஞ்சல் சேவையும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை முத்துப்பந்தல் வாகனச் சேைவயும் நடந்தது.
விழாவில் பெரிய ஜீயர்சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கராஜு, கோவில் சூப்பிரண்டு ரமேஷ், ஆய்வாளர்கள் முனிரத்தினம், ஜெயக்குமார் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஊஞ்சல் சேவையும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை முத்துப்பந்தல் வாகனச் சேைவயும் நடந்தது.
விழாவில் பெரிய ஜீயர்சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கராஜு, கோவில் சூப்பிரண்டு ரமேஷ், ஆய்வாளர்கள் முனிரத்தினம், ஜெயக்குமார் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






