என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிரம்மோற்சவ விழா: உற்சவர் கபிலேஸ்வரர் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
Byமாலை மலர்12 March 2021 5:56 AM GMT (Updated: 12 March 2021 5:56 AM GMT)
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. காலை 7 மணியில் இருந்து காலை 8 மணி வரை தேரோட்டம் (போகிதேரு) நடந்தது. அதில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதையடுத்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை அர்ச்சகர்கள் ஏகாந்தமாக உற்சவர் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் ஆகியோருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நந்தி வாகனச் சேவை, ஆஸ்தானம் நடந்தது.
மகா சிவராத்திரியையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை அபிஷேகம் நடைபெறும். சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரெட்டிசேகர், சீனிவாஸ்நாயக் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை அர்ச்சகர்கள் ஏகாந்தமாக உற்சவர் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் ஆகியோருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நந்தி வாகனச் சேவை, ஆஸ்தானம் நடந்தது.
மகா சிவராத்திரியையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை அபிஷேகம் நடைபெறும். சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரெட்டிசேகர், சீனிவாஸ்நாயக் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X