என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மலை மாதேஸ்வரா கோவிலுக்கு இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் வர தடை
Byமாலை மலர்10 March 2021 8:14 AM GMT (Updated: 10 March 2021 8:14 AM GMT)
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் 4 நாட்கள் மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதித்து சாம்ராஜ்நகர் கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா மாதேஸ்வரன் மலையில் உள்ளது மலை மாதேஸ்வரா கோவில். பிரசித்திபெற்ற இந்த கோவிலுக்கு அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், தெலுங்கானாவில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
ஆண்டுதோறும் இந்த கோவிலில் சிவராத்திரியையொட்டி 4 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மலை மாதேஸ்வரா கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் கோவில் நடை திறக்கப்பட்டது. தற்போது தினமும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சிவராத்திரியையொட்டி மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் கார்த்திகாயினி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
மலை மாதேஸ்வரா கோவிலில் நாளை(அதாவது இன்று) முதல் 4 நாட்களுக்கு சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளில் அண்டை மாநில பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து இங்கு பக்தர்கள் வரும் போது, சாம்ராஜ்நகரில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நாளை(இன்று) முதல் 4 நாட்கள் மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளிமாநில பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தடுக்க சோதனை சாவடிகளும் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்டுதோறும் இந்த கோவிலில் சிவராத்திரியையொட்டி 4 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மலை மாதேஸ்வரா கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் கோவில் நடை திறக்கப்பட்டது. தற்போது தினமும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சிவராத்திரியையொட்டி மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் கார்த்திகாயினி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
மலை மாதேஸ்வரா கோவிலில் நாளை(அதாவது இன்று) முதல் 4 நாட்களுக்கு சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளில் அண்டை மாநில பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து இங்கு பக்தர்கள் வரும் போது, சாம்ராஜ்நகரில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நாளை(இன்று) முதல் 4 நாட்கள் மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளிமாநில பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தடுக்க சோதனை சாவடிகளும் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X