என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிரம்மோற்சவ விழா: காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
Byமாலை மலர்9 March 2021 9:14 AM GMT (Updated: 9 March 2021 9:14 AM GMT)
காரைக்கால் சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
காரைக்கால் சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவலால் விழா தடைபட்டது.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என உபயதாரர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
முன்னதாக பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பந்தக்கால் வெளிப் பிரகாரத்தில் வலம் வந்து கோவில் வாசலில் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 19-ந் தேதி கொடியேற்றமும், 27-ந் தேதி தேரோட்டமும், 30-ந் தேதி அம்மையார் ஐக்கிய விழாவும் 31-ந் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என உபயதாரர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
முன்னதாக பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பந்தக்கால் வெளிப் பிரகாரத்தில் வலம் வந்து கோவில் வாசலில் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 19-ந் தேதி கொடியேற்றமும், 27-ந் தேதி தேரோட்டமும், 30-ந் தேதி அம்மையார் ஐக்கிய விழாவும் 31-ந் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X