search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
    X
    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

    திருப்பரங்குன்றம் கோவில் திருக்கல்யாணம், தேரோட்டத்தில் அன்னதானம் வழங்க அனுமதி கிடைக்குமா?

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறக்கூடிய பங்குனிப் பெருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டத்தில் அன்னதானம் வழங்க அனுமதி கிடைக்குமா என்று பக்தர்கள் இடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஏப்ரல் 2-ந்தேதி வரை பங்குனிப் பெருவிழா நடக்கிறது. அதில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி திருக்கல்யாணமும், மறுநாள் 1-ந்தேதி மகா தேரோட்டமும் நடக்கிறது.

    முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் முடிந்ததும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம். இதேபோல கிரிவலப்பாதையில் மகா தேர்வலம் வரும்போதும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம். அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பலர் மண்டபங்களில் பக்தர்களை வரவழைத்து அன்னதானம் வழங்குவார்கள்.

    மகாதேரோட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளியூரை சோந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் தேருக்கு முன்னும், பின்னுமாக செல்லுவார்கள். குறிப்பாக எம்.எல்.ஏ, எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. என்று பலர் கலந்துகொள்வார்கள். அவர்களுடன் அவரவர் கட்சி நிர்வாகிகளும் தேர்நிலைக்கு வரும்வரை அணி, அணியாக கலந்துகொள்வார்கள். இத்தகைய நிகழ்வு காலம்காலமாக தொன்றுதொட்டு நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    எனவே அரசியல் கட்சியினர் தேரோட்டத்தில் பங்கேற்பதில் நிபந்தனைகள் உண்டா என்பது தெரியவில்லை. கிராம திருவிழா என்பதாலும், கடந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உருவான ஊரடங்கால் பங்குனி பெருவிழா தேரோட்டம் ரத்தானது.

    இந்த நிலையில் தேர்தலும், தேரோட்டமும் ஒரே சமயத்தில் வருவதால் அரசியல் கட்சியினருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கம்போல தேரோட் டத்தில் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்த பிறகு தேர்தல் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்று அரசியல் கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

    இதுதொடர்பாக இன்று (6-ந்தேதி) ஆர்.டி.ஓ. சவுந்தரியா தலைமையில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. அதில் தேர்தல் நன்டைத்தை விதிக்கு உட்பட்ட முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
    Next Story
    ×