
அதன்படி, இந்த ஆண்டும் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தங்க கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பொதுஜனசேவையும் நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார். இதில் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழஅன்பில், நடராஜபுரம், ஆதிகுடி, அரியூர், செம்பரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.