என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை
Byமாலை மலர்5 March 2021 4:59 AM GMT (Updated: 5 March 2021 4:59 AM GMT)
லால்குடியை அடுத்த அன்பில் சுந்தரராஜபெருமாள் கோவிலில் மாசி மாத தங்க கருட சேவை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுந்தரராஜபெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கீழ் செயல்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தங்க கருட சேவை திருவிழா நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டும் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தங்க கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பொதுஜனசேவையும் நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார். இதில் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழஅன்பில், நடராஜபுரம், ஆதிகுடி, அரியூர், செம்பரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
அதன்படி, இந்த ஆண்டும் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தங்க கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பொதுஜனசேவையும் நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார். இதில் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழஅன்பில், நடராஜபுரம், ஆதிகுடி, அரியூர், செம்பரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X