
தொடர்ந்து, பெருமாள் திருப்பல்லக்கில் மாடவளாகம், வீதியுலா நடைபெற்றது. விழாவில், கைலாசநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, இன்று (புதன்கிழமை) காலை தேரோட்டம், 27-ந் தேதி திருமலைராயன்பட்டினம் மாசிமக விழாவில் பங்கேற்கும் வண்ணம் பெருமாள் திருப்பல்லக்கில் வீதியுலா, மார்ச் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.