என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்17 Feb 2021 7:55 AM GMT (Updated: 17 Feb 2021 7:55 AM GMT)
காரைக்கால் நித்ய கல்யாணப்பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் பாரதியார் சாலையில் நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக ஸ்ரீதேவி, பூதேவியுடன் நித்ய கல்யாணப்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் கொடிகம்பம் அருகில் எருந்தளினார். பின்னர் மேள, தாளம் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் கைலாசநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணை தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ், கோவில் முன்னாள் தனி அதிகாரி ஆசைத்தம்பி, மாவட்ட இந்து முன்னணி தலைவர் விஜயன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், 24-ந் தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் நிகழ்ச்சியும், 27-ந் தேதி பெருமாள் திருப்பல்லக்கில் திருமலைராயன்பட்டினம் மாசிமக விழாவில் பங்கேற்கும் வண்ணம் வீதியுலாவும் நடக்கிறது. மார்ச் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்பத்திருவிழாவும் நடக்க இருக்கிறது.
விழாவில் கைலாசநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணை தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ், கோவில் முன்னாள் தனி அதிகாரி ஆசைத்தம்பி, மாவட்ட இந்து முன்னணி தலைவர் விஜயன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், 24-ந் தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் நிகழ்ச்சியும், 27-ந் தேதி பெருமாள் திருப்பல்லக்கில் திருமலைராயன்பட்டினம் மாசிமக விழாவில் பங்கேற்கும் வண்ணம் வீதியுலாவும் நடக்கிறது. மார்ச் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்பத்திருவிழாவும் நடக்க இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X