
இதுபற்றி கோவில் நிர்வாக செயலாளர் மோகன் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பத்ரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா வருகிற 9-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி முடிவடைகிறது. குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை 18-ந் தேதி நடக்கிறது. தூக்க நேர்ச்சையில் கலந்து கொள்பவர்கள் பெயர் பதிவு 1-ந் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு தூக்க நேர்ச்சையில் பெயர் பதிவு செய்தவர்கள், இந்த ஆண்டு தூக்க நேர்ச்சை நடக்கும் தினத்தன்று, தூக்க நடைக்கு நிறுத்தல் நேர்ச்சை செய்து கொள்ளலாம். விழா நாட்களில் பக்தர்கள் கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிப்பது கட்டாயம் என்றார்.