என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா நாளை நடக்கிறது
Byமாலை மலர்10 Feb 2021 8:03 AM GMT (Updated: 10 Feb 2021 8:03 AM GMT)
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசை விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசை விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து தீபாராதனை, உஷ பூஜை, உச்சிகால பூஜை போன்றவை முடிந்த பின்பு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தை அமாவாசையையொட்டி நாளை அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்தொடர் கடற்கரையில் முன்னோர்களை நினைத்து புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து இருக்கும் வேதமந்திர ஓதுவார்களிடம் இருந்து பலிகர்ம பொருட்களை பெற்று தர்ப்பணம் கொடுப்பார்கள். பின்னர் கடலில் புனித நீராடி ஈரத்துணியுடன் வந்து கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள்.
இதையொட்டி கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நிகழ்ச்சியும், தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
தை அமாவாசையையொட்டி நாளை அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்தொடர் கடற்கரையில் முன்னோர்களை நினைத்து புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து இருக்கும் வேதமந்திர ஓதுவார்களிடம் இருந்து பலிகர்ம பொருட்களை பெற்று தர்ப்பணம் கொடுப்பார்கள். பின்னர் கடலில் புனித நீராடி ஈரத்துணியுடன் வந்து கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள்.
இதையொட்டி கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நிகழ்ச்சியும், தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X