
இவ்வாறு பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 30 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு மாசி மக பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.
இதில் யாழ்பாணம் பரணி ஆதீனம் செவ்வந்தி நாதர் பண்டார சன்னதி, வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், உபயதாரர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.