என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 28-ந்தேதி நடக்கிறது.
Byமாலை மலர்23 Jan 2021 6:48 AM GMT (Updated: 23 Jan 2021 6:48 AM GMT)
கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 19-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல்நாள் அதிகாலை 5.30 மணிக்கு நிர்மால்ய தரிசனம், காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு யாகசாலை பூஜை, 9 மணிக்கு ராஜமேளம், 10.30 மணிக்கு கொடி ஏற்றம் நடந்தது. பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு பஜனை, 8 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமியுடன் அம்பாள் கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.
10-ம் நாள் திருவிழாவான 28-ந்தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி கிரிவலம் வருதல், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை குளத்தில் சாமிக்கு தீர்த்தவாரி ஆராட்டு ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் நற்பணி மன்றத்தினர் செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல்நாள் அதிகாலை 5.30 மணிக்கு நிர்மால்ய தரிசனம், காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு யாகசாலை பூஜை, 9 மணிக்கு ராஜமேளம், 10.30 மணிக்கு கொடி ஏற்றம் நடந்தது. பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு பஜனை, 8 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமியுடன் அம்பாள் கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.
10-ம் நாள் திருவிழாவான 28-ந்தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி கிரிவலம் வருதல், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை குளத்தில் சாமிக்கு தீர்த்தவாரி ஆராட்டு ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் நற்பணி மன்றத்தினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X