என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்23 Jan 2021 5:21 AM GMT (Updated: 23 Jan 2021 5:21 AM GMT)
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி சாமிக்கு அபிஷேகம், இரவில் மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. 25-ந் தேதி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு அலங்காரத்துடன் சாமி திருவீதி உலா, 26-ந் தேதி சாமிக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம், மின் அலங்காரத்துடன் சாமி திருவீதி உலா, 27-ந் தேதி இரவு 12 மணி அளவில் திருக்கல்யாண வைபோகம் நடக்கிறது.
விழாவில் 28-ந் தேதி தைப்பூச நாளன்று சொர்க்கவாசல் திறப்பு மற்றும் ஈரோடு மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, நாமக்கல் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழரசு ஆகியோர் முன்னிலையில் மாலை 3.30 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 29-ந் தேதி சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம், இரவில் முத்து பல்லக்கில் சாமி ஊர்வலம், 30-ந் தேதி தேதி சத்தாபரணம், மின் அலங்காரத்தில் சாமி திருவீதி உலா, நிறைவு நாளான 31-ந் தேதி வசந்த விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டின் படி திருவிழாவுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும் முககவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்யுமாறும் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சரஸ்வதி சதாசிவம், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
விழாவில் 28-ந் தேதி தைப்பூச நாளன்று சொர்க்கவாசல் திறப்பு மற்றும் ஈரோடு மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, நாமக்கல் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழரசு ஆகியோர் முன்னிலையில் மாலை 3.30 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 29-ந் தேதி சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம், இரவில் முத்து பல்லக்கில் சாமி ஊர்வலம், 30-ந் தேதி தேதி சத்தாபரணம், மின் அலங்காரத்தில் சாமி திருவீதி உலா, நிறைவு நாளான 31-ந் தேதி வசந்த விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டின் படி திருவிழாவுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும் முககவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்யுமாறும் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சரஸ்வதி சதாசிவம், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X