
விழாவில் 28-ந் தேதி தைப்பூச நாளன்று சொர்க்கவாசல் திறப்பு மற்றும் ஈரோடு மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, நாமக்கல் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழரசு ஆகியோர் முன்னிலையில் மாலை 3.30 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 29-ந் தேதி சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம், இரவில் முத்து பல்லக்கில் சாமி ஊர்வலம், 30-ந் தேதி தேதி சத்தாபரணம், மின் அலங்காரத்தில் சாமி திருவீதி உலா, நிறைவு நாளான 31-ந் தேதி வசந்த விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டின் படி திருவிழாவுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும் முககவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்யுமாறும் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சரஸ்வதி சதாசிவம், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.