என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தை திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்20 Jan 2021 6:48 AM GMT (Updated: 20 Jan 2021 6:48 AM GMT)
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5 மணிக்கு விநாயகர், ஸ்ரீ பூதநாதர், சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. காலை 8.40 மணிக்கு மேளதாள, வெடி முழக்கத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, பூதப்பாண்டி தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ராமசந்திரன், ஸ்ரீ காரியம் சேது ராம், பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகராஜன், குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், எம்.ஜி.ஆர். மன்ற தோவாளை ஒன்றிய செயலாளர், கே.சி.யு.மணி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பா. ஜனதா கட்சி நிர்வாகிகள் நாகராஜன், ரெங்கநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா வருகிற 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும், வாகன பவனி, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 27-ந் தேதி காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அன்று இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 28-ந் தேதி காலை 9 மணிக்கு ஆறாட்டு விழா, இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5 மணிக்கு விநாயகர், ஸ்ரீ பூதநாதர், சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. காலை 8.40 மணிக்கு மேளதாள, வெடி முழக்கத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, பூதப்பாண்டி தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ராமசந்திரன், ஸ்ரீ காரியம் சேது ராம், பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகராஜன், குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், எம்.ஜி.ஆர். மன்ற தோவாளை ஒன்றிய செயலாளர், கே.சி.யு.மணி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பா. ஜனதா கட்சி நிர்வாகிகள் நாகராஜன், ரெங்கநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா வருகிற 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும், வாகன பவனி, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 27-ந் தேதி காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அன்று இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 28-ந் தேதி காலை 9 மணிக்கு ஆறாட்டு விழா, இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X