என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கோ பூஜை
Byமாலை மலர்16 Jan 2021 3:00 AM GMT (Updated: 16 Jan 2021 3:00 AM GMT)
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மேளதாளத்துடன் கோபூஜையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கோமாதாவிற்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் கோசாலையில் ஆண்டுதோறும் கோ பூஜை, மாட்டு பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழக முதல்- அமைச்சரின் உத்தரவுப்படி கோ பூஜை, மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.
சுசீந்திரம் கோவில் கோசாலையில் உள்ள 17 மாடுகளுக்கும் கொம்புகளில் வர்ணம் பூசி மாலை அணிவித்து நெத்தி பட்டம் சூட்டி. பரிவட்டம் கட்டி. வஸ்திரங்கள் சாத்தி கவுரவிக்கப்பட்டன.
முன்னதாக கோவில் முகப்பில் கணபதி பூஜையும். லட்சுமி பூஜையும் நடந் தது. கோவில் வாசல் முன்பு 17 மாடுகளுக்கும் பொங்கல் விடும் வகையில் 17 பெண்கள் பொங்கல் பானை வைத்து கரும்பு, மஞ்சள் குலை நட்டு விளக்கேற்றி பொங்கலிட்டனர். சூடம் ஏற்றி பொங்கலிடும் நிகழ்ச்சியை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.
மேளதாளத்துடன் கோபூஜையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கோமாதாவிற்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பொங்கலிட்ட பெண்களுக்கு தளவாய்சுந்தரம் பரிசு வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X