என் மலர்
ஆன்மிகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆங்கில புத்தாண்டையொட்டி இந்த கோவிலில் நேற்று அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது.
பின்னர் வெற்றிலை மாலையில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து எண்ணெய், பால், தயிர் மற்றும் சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு பட்டாச்சாரியர்கள் சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
இதை தொடர்ந்து ரோஜா, சம்பங்கி, மல்லிகை, சாமந்தி, அரளி உள்ளிட்ட பூக்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பட்டாச்சாரியர்கள் பூக்களை கொட்டி அபிஷேகம் செய்தனர். இதையடுத்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.
புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். ரூ.20 செலுத்தி விரைவு தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
Next Story






