என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா ரத்து
Byமாலை மலர்28 Aug 2020 4:07 AM GMT (Updated: 28 Aug 2020 4:07 AM GMT)
பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது.
பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை நடைபெற இருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக் கான பிரமோற்சவ விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. அதேவேளையில் ஆகமவிதிப்படி கோவிலில் பூஜைகள் மட்டும் நடைபெறும். மேலும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்வு, தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது.
மற்றபடி பூஜைகள் அனைத்தும் நடைபெறும். இதுதவிர திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவில், வேளஸ்வரர் கோவில் ஆகியவற்றில் வருகிற 31-ந்தேதி வருடாபிஷேகம் நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை நடைபெற இருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக் கான பிரமோற்சவ விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. அதேவேளையில் ஆகமவிதிப்படி கோவிலில் பூஜைகள் மட்டும் நடைபெறும். மேலும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்வு, தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது.
மற்றபடி பூஜைகள் அனைத்தும் நடைபெறும். இதுதவிர திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவில், வேளஸ்வரர் கோவில் ஆகியவற்றில் வருகிற 31-ந்தேதி வருடாபிஷேகம் நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X