என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆன்மிக தகவல்கள்
Byமாலை மலர்28 May 2019 5:02 AM GMT (Updated: 28 May 2019 5:02 AM GMT)
இந்து சமயத்தில் வழிபாடுகள் சிறப்பு வாய்ந்தவை. சிறப்பு வாய்ந்த, அரிய வழிபாட்டு தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
இரட்டை நடராஜர்
கரூர் மாவட்டம் குளித்தலையில் இருக்கிறது, கடம்பவனநாதர் ஆலயம். இங்கு இரண்டு நடராஜப் பெருமானை தரிசனம் செய்யலாம். ஒரே சன்னிதியில் இருவரும் அருகருகே இரண்டு நடராஜர்களை தரிசனம் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இதில் ஒரு நடராஜருக்கு ஒருவருக்கு உத்ராயணத்திலும், மற்றவருக்கு தட்சிணாயத்திலும் பூஜைகள் நடக்கின்றன.
சப்தஸ்வர அன்னை
கோயம்புத்தூரில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் செம்மேடு அருகே அமைந்துள்ளது கோட்டைக்காடு என்ற ஊர். இங்கு கோவில் கொண்டுள்ள அன்னை முத்துவாளியின் தலை, கைகள், வயிறு என ஒவ்வொரு பகுதியில் தட்டும் போதும் ஒவ்வொரு ஸ்வரமாக ஒலி ஏற்படுகிறது. ஏழு ஸ்வரங்கள் தன்னிடம் அடக்கம் என்பதை இந்த அம்மன் சிலை காட்டுகிறது.
கை கட்டிய எமன்
கும்பகோணம் அருகிலுள்ளது தி.காவல் என்னும் கிராமம். இங்குள்ள சிவன் கோவிலில் இரு கைகளும் கட்டிப்போடப்பட்ட நிலையில் எமதர்மனும், அருகில் கையில் எழுத்தாணியுடன் சித்ரகுப்தனும் காட்சி தருகின்றனர்.
தூணில் சரபேஸ்வரர்
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தூணில் சரபேஸ்வரர் வீற்றிருக்கிறார். இவருடன் சூலினி மற்றும் பிரத்யங்கரா தேவியரும் காட்சியளிக்கிறார்கள். ராகுவின் அதிதேவதை சூலினி துர்க்கை. பிரத்யங்கரா தேவி நாகத்தை மோதிரமாக அணிந்தவர். சரபமூர்த்தியின் வால்தான் ராகு பகவான். எனவே இவரை ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில் வணங்க நாகதோஷம் நீங்கும்.
யோக கேது
சீர்காழி வட்டம் செம்மங்குடி கிராமத்தில் கேது மூர்த்தி உடலோடு ஐந்து தலை நாகம் குடை பிடிக்க யோக கேதுவாக அருள்பாலித்துக் கொண்டிருக் கிறார். இவரை செவ்வல்லி மலர் கொண்டு பூஜித்தால் கிரகதோஷம், வியாதிகள் நீங்கி நலம் பெறலாம்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் இருக்கிறது, கடம்பவனநாதர் ஆலயம். இங்கு இரண்டு நடராஜப் பெருமானை தரிசனம் செய்யலாம். ஒரே சன்னிதியில் இருவரும் அருகருகே இரண்டு நடராஜர்களை தரிசனம் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இதில் ஒரு நடராஜருக்கு ஒருவருக்கு உத்ராயணத்திலும், மற்றவருக்கு தட்சிணாயத்திலும் பூஜைகள் நடக்கின்றன.
சப்தஸ்வர அன்னை
கோயம்புத்தூரில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் செம்மேடு அருகே அமைந்துள்ளது கோட்டைக்காடு என்ற ஊர். இங்கு கோவில் கொண்டுள்ள அன்னை முத்துவாளியின் தலை, கைகள், வயிறு என ஒவ்வொரு பகுதியில் தட்டும் போதும் ஒவ்வொரு ஸ்வரமாக ஒலி ஏற்படுகிறது. ஏழு ஸ்வரங்கள் தன்னிடம் அடக்கம் என்பதை இந்த அம்மன் சிலை காட்டுகிறது.
கை கட்டிய எமன்
கும்பகோணம் அருகிலுள்ளது தி.காவல் என்னும் கிராமம். இங்குள்ள சிவன் கோவிலில் இரு கைகளும் கட்டிப்போடப்பட்ட நிலையில் எமதர்மனும், அருகில் கையில் எழுத்தாணியுடன் சித்ரகுப்தனும் காட்சி தருகின்றனர்.
தூணில் சரபேஸ்வரர்
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தூணில் சரபேஸ்வரர் வீற்றிருக்கிறார். இவருடன் சூலினி மற்றும் பிரத்யங்கரா தேவியரும் காட்சியளிக்கிறார்கள். ராகுவின் அதிதேவதை சூலினி துர்க்கை. பிரத்யங்கரா தேவி நாகத்தை மோதிரமாக அணிந்தவர். சரபமூர்த்தியின் வால்தான் ராகு பகவான். எனவே இவரை ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில் வணங்க நாகதோஷம் நீங்கும்.
யோக கேது
சீர்காழி வட்டம் செம்மங்குடி கிராமத்தில் கேது மூர்த்தி உடலோடு ஐந்து தலை நாகம் குடை பிடிக்க யோக கேதுவாக அருள்பாலித்துக் கொண்டிருக் கிறார். இவரை செவ்வல்லி மலர் கொண்டு பூஜித்தால் கிரகதோஷம், வியாதிகள் நீங்கி நலம் பெறலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X