search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்ற காட்சி. (உள்படம்:-ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி)
    X
    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்ற காட்சி. (உள்படம்:-ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி)

    திருவந்திபுரத்தில் பிரம்மோற்சவம்: தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம்

    பிரம்மோற்சவத்தையொட்டி திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    கடலூர் அடுத்த திருவந்தி புரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் பிரம் மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தது.

    பிரம்மோற்சவத்தில் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவரான தேவநாத சுவாமிக்கும், செங்கமலத் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் தேவநாதசுவாமி தாயாருடன் சிறப்பு அலங் காரத்தில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து அலங் கரிக்கப்பட்ட உற்சவரான ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி மேளதாளத் துடன் கோவிலில் இருந்து தேருக்கு கொண்டு செல்லப் பட்டது. கோவில் அருகில் அலங்கரித்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாத சுவாமி எழுந் தருளினர். அங்கு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக் கப்பட்டது.

    பின்னர் அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா...! கோவிந்தா...! என்ற பக்தி கோஷமிட்டபடி, வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோடும் வீதியில் அசைந் தாடி வந்த தேரை, ஏராளமான பக்தர்கள் கண்டு, பயபக்தி யுடன் சாமி தரிசனம் செய் தனர். இதற்கான ஏற் பாடுகளை பட்டாச் சாரியார் கள், அறநிலையத்துறை அதி காரிகள், பக்தர்கள் செய் திருந்தனர்.
    Next Story
    ×