search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சகுனங்கள் கூறும் பலன்கள்
    X

    சகுனங்கள் கூறும் பலன்கள்

    நம் எதிரில் வரக்கூடிய சகுனங்களே அதற்கான அறிகுறியைக் காட்டிவிடும். நல்ல சகுனங்களாக இருக்கும் பட்சத்தில் காரியங்களை முடிக்கச் செல்லலாம்.
    ஒவ்வொருவரும் ‘நாம் இன்று செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றிபெற வேண்டும்’ என்று நினைத்தபடி தான் வீட்டில் இருந்து வெளியே வருகிறோம். நம் எதிரில் வரக்கூடிய சகுனங்களே அதற்கான அறிகுறியைக் காட்டிவிடும். நல்ல சகுனங்களாக இருக்கும் பட்சத்தில் காரியங்களை முடிக்கச் செல்லலாம்.

    சகுனங்கள் சுமாராக இருக்கும் பட்சத்தில் வீட்டிற்குள் மீண்டும் சென்று தெய்வங்களை வணங்கி விட்டுச் செல்லலாம். அல்லது தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் செல்வதால் சகுனத் தடைகள் மாறி நற்பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அந்த அடிப்படையில் ஒரு காரியத்தைத் தொடங்கும் பொழுது கோவில் மணி ஒலித்தால் காரிய வெற்றி கிட்டும். வீட்டிலிருந்து வெளியில் புறப்படும் பொழுது தண்ணீர் நிறை குடமாக வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதேபோல் பால், பூத்தட்டு, உப்பு மூட்டை வந்தால் காரியம் உடனடியாக நிறைவேறும். கர்ப்பிணிப் பெண் எதிரில் வந்தால் தொழிலில் தன லாபம் பெருகும். காகம் இடமிருந்து வலமாகச் சென்றால் எடுத்த காரியங்கள் இனிதே வெற்றிபெறும்.
    Next Story
    ×