என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவிலில் தல வரலாறு திருவிளையாடல் விழா
Byமாலை மலர்15 March 2019 5:57 AM GMT (Updated: 15 March 2019 5:57 AM GMT)
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவில் தல வரலாறு திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று கோவில் உருவான தல வரலாறு திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதாவது ராமகோன் என்பவர் பாண்டிய மன்னருக்கு தினமும் பால் கொண்டு செல்வது வழக்கம். தற்போது நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள பகுதியில் அடர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் காடு வழியாக ராமகோன் பால் கொண்டு செல்லும்போது ஓரிடத்தில் மூங்கிலால் தட்டிவிடப்பட்டு, அந்த மூங்கில் மீது பால் கொட்டியது. இது தொடர்ந்து நடைபெற்றதை அறிந்த மன்னர், மூங்கில் மரத்தை வெட்டி அகற்ற உத்தரவிட்டார். அவ்வாறு செய்தபோது சுவாமி காட்சி கொடுத்தார். அவர் வேணுவன நாதர், வேணுவன ஈசுவரன் என்று அழைக்கப்பட்டார். பின்னாளில் நெல்லுக்கு வேலியிட்ட மற்றொரு திருவிளையாடலால் நெல்லையப்பர் என்ற பெயர் பெற்றார் என்று புராண வரலாறு கூறுகிறது.
இத்தகைய சிறப்புவாய்ந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஹோம பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சன்னதியில் உள்ள தல விருட்சம் மூங்கிலுக்கு சிறப்பு பூஜையும், அங்கு அமைக்கப்பட்டு உள்ள ராமகோன் சிலைக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி-அம்பாளை வழிபட்டனர்.
அதாவது ராமகோன் என்பவர் பாண்டிய மன்னருக்கு தினமும் பால் கொண்டு செல்வது வழக்கம். தற்போது நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள பகுதியில் அடர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் காடு வழியாக ராமகோன் பால் கொண்டு செல்லும்போது ஓரிடத்தில் மூங்கிலால் தட்டிவிடப்பட்டு, அந்த மூங்கில் மீது பால் கொட்டியது. இது தொடர்ந்து நடைபெற்றதை அறிந்த மன்னர், மூங்கில் மரத்தை வெட்டி அகற்ற உத்தரவிட்டார். அவ்வாறு செய்தபோது சுவாமி காட்சி கொடுத்தார். அவர் வேணுவன நாதர், வேணுவன ஈசுவரன் என்று அழைக்கப்பட்டார். பின்னாளில் நெல்லுக்கு வேலியிட்ட மற்றொரு திருவிளையாடலால் நெல்லையப்பர் என்ற பெயர் பெற்றார் என்று புராண வரலாறு கூறுகிறது.
இத்தகைய சிறப்புவாய்ந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஹோம பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சன்னதியில் உள்ள தல விருட்சம் மூங்கிலுக்கு சிறப்பு பூஜையும், அங்கு அமைக்கப்பட்டு உள்ள ராமகோன் சிலைக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி-அம்பாளை வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X