search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது
    X

    தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது

    திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 1-ந்தேதி ஆழிதேரோட்டம் நடக்கிறது.
    கடவுள்களின் மகாராஜா எனக் கூறப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய 96 அடி உயரமுடைய ஆழித் தேரோட்டம் நடைபெறும்.

    இத்திருக்கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்று காலை கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெரிய கொடியேற்றம் நடைபெற்றது.

    வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் ஆரூரா தியாகேசா என மனம் உருகி வணங்கிய நிலையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், சைவமத சான்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவாக திருவாரூர் ஆழித் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    இதற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக அதிகாரிகள் தொடங்கி யுள்ளனர் தேரோட்டத்தைமுன்னிட்டு முன்னதாக சுப்பிரமணியர், விநாயகர் தேரோட்டமும் இறுதியாக அம்பாள், சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் ஆகிய 5 தேர்கள் கோயில் வீதிகளில் இழுத்துச் செல்லப்படும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செய்திருந்தார். வருகிற ஏப்ரல் 1-ந்தேதி பிரசித்தி பெற்ற ஆழிதேரோட்டம் நடைபெறுகிறது.
    Next Story
    ×