என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்6 Feb 2019 2:55 AM GMT (Updated: 6 Feb 2019 2:55 AM GMT)
திண்டுக்கல் பக்தர்களின் கோஷம் முழங்க கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. மறுநாள் 1-ந் தேதி பூச்சொரிதல் விழா, 3-ந் தேதி சாட்டுதலும் நடந்தது.
அதனைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடந்தது. திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துபடி செய்த பின் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி தலைமையில் சபா மண்டபத்தில் இருந்து அம்மனுக்கு சாத்துபடி செய்யப்படும் மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் ஆகியவை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் புடவை சாத்துபடி, திருமாங்கல்யம் சாத்துபடி செய்தல் நடந்தது.
அதேபோல் திண்டுக்கல் டவுண் மார்க்கெட் குமரன் தெரு சாம்பன் குலத்தார் சார்பில் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே சுற்றி வந்து கோவிலை அடைந்தது. அதன்பிறகு பாலக்கொம்பு ஊன்றப்பட்டது. இதையடுத்து ஏராளமான பெண்கள் பாலகொம்புக்கு மஞ்சள் நீர் ஊற்றினர்.
அதனைத்தொடர்ந்து கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மஞ்சள் வண்ண துணியில் சிங்க வாகனத்தில் கோட்டை மாரியம்மன் அமர்ந்து இருப்பதை போன்று வரையப்பட்ட கொடி தயார் நிலையில் இருந்தது. கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் கொடியில் உள்ள அம்மன் படத்துக்கு கண் திறப்பு நடந்தது.
அதன்பிறகு பகல் 12 மணியளவில் கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் ஓம் சக்தி, பராசக்தி என கோஷம் எழுப்பினர். இதில் திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் மருதராஜ், விஸ்வகர்ம மகாஜன சபா அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சங்க செயலாளர் சந்தானம், இணை செயலாளர் சின்னு, நிர்வாகிகள் முத்து, காளிராஜ் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு விஸ்வகர்ம அறக் கட்டளை இயக்குனர் குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது.
அதனைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் கோவிலில் உள்ள கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணியளவில் அம்மனின் மின்தேர் வீதிஉலா தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. 8 மணியளவில் கோவில் கலையரங்கில் திண்டுக்கல் விஸ்வகர்ம பொற்பணியாளர்கள் இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசைக்கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடந்தது. திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துபடி செய்த பின் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி தலைமையில் சபா மண்டபத்தில் இருந்து அம்மனுக்கு சாத்துபடி செய்யப்படும் மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் ஆகியவை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் புடவை சாத்துபடி, திருமாங்கல்யம் சாத்துபடி செய்தல் நடந்தது.
அதேபோல் திண்டுக்கல் டவுண் மார்க்கெட் குமரன் தெரு சாம்பன் குலத்தார் சார்பில் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே சுற்றி வந்து கோவிலை அடைந்தது. அதன்பிறகு பாலக்கொம்பு ஊன்றப்பட்டது. இதையடுத்து ஏராளமான பெண்கள் பாலகொம்புக்கு மஞ்சள் நீர் ஊற்றினர்.
கோவிலுக்கு மஞ்சள்நீர் எடுத்து வந்த பெண் பக்தர்கள்.
அதன்பிறகு பகல் 12 மணியளவில் கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் ஓம் சக்தி, பராசக்தி என கோஷம் எழுப்பினர். இதில் திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் மருதராஜ், விஸ்வகர்ம மகாஜன சபா அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சங்க செயலாளர் சந்தானம், இணை செயலாளர் சின்னு, நிர்வாகிகள் முத்து, காளிராஜ் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு விஸ்வகர்ம அறக் கட்டளை இயக்குனர் குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது.
அதனைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் கோவிலில் உள்ள கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணியளவில் அம்மனின் மின்தேர் வீதிஉலா தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. 8 மணியளவில் கோவில் கலையரங்கில் திண்டுக்கல் விஸ்வகர்ம பொற்பணியாளர்கள் இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசைக்கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X