search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் ஊஞ்சல் திருநாள் 10-ம் தேதி தொடங்குகிறது
    X

    ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் ஊஞ்சல் திருநாள் 10-ம் தேதி தொடங்குகிறது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாச்சியார்(தாயார்) ஊஞ்சல் திருநாள் (டோலோற்சவம்) நாளை மறுநாள் தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாச்சியார்(தாயார்) ஊஞ்சல் திருநாள் (டோலோற்சவம்) நாளை மறுநாள் (சனிக் கிழமை) தொடங்கி வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

    ஊஞ்சல் திருநாளையொட்டி ஸ்ரீரெங்க நாச்சியார், 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் ஆரம்பமாகி 8 மணிக்கு நிறைவு பெறும். 8.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 16-ந்தேதி மட்டும் வழக்கம் போல் மாலை 5.30 மணிக்கு புறப்பாடாகி இரவு 9.30 மணிக்கு படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    ஊஞ்சல் திருநாள் நடைபெறும் நாட்களில் தாயார் சன்னதி வளாகத்தினுள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் தாயார் எழுந்தருளி தீபாராதனை பூஜை நடக்கிறது. தினமும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது.

    இந்த தகவலை கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×