search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடக்கம்
    X

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடக்கம்

    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது. நாளை முதல் வருகிற 13-ந்தேதி வரை மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நவராத்திரி மண்டபம் வந்தடைகிறார். மாலை 6.30 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 7.30 மணிக்கு முடிவடையும். இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 8.15 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    வருகிற 14-ந்தேதி மாலை 4.15 மணிக்கு தாயார் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நவராத்திரி மண்டபம் சேர்ந்தடைகிறார். மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு முடிவடையும். இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி, பொது ஜன சேவையுடன் நடைபெறும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    வருகிற 18-ந்தேதி சரஸ்வதி பூஜையன்று மாலை 4.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு நவராத்திரி மண்டபம் சேர்ந்தடைகிறார். மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி, பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடடைகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×