என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா 17-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்30 Jun 2018 4:43 AM GMT (Updated: 30 Jun 2018 4:43 AM GMT)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பழமை வாய்ந்த வன பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. மாவட்டத்தில் அம்மன் திருத்தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா வருகிற 17-ந் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
20-ந் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை, 21-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராமசாந்தி, 22-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
23-ந் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறத்தல், 24-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதில் மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குகின்றனர். 25-ந் தேதி காலை 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
26-ந் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 27-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகாஅபிஷேகம், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 30-ந் தேதி காலை 10 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. 31-ந் தேதி காலை 8 மணிக்கு மறு பூஜையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, உதவி ஆணையரும், செயல் அலுவலருமான க.ராமு ஆகியோர் செய்து வருகின்றனர்.
20-ந் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை, 21-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராமசாந்தி, 22-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
23-ந் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறத்தல், 24-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதில் மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குகின்றனர். 25-ந் தேதி காலை 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
26-ந் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 27-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகாஅபிஷேகம், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 30-ந் தேதி காலை 10 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. 31-ந் தேதி காலை 8 மணிக்கு மறு பூஜையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, உதவி ஆணையரும், செயல் அலுவலருமான க.ராமு ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X