என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்25 Jun 2018 5:14 AM GMT (Updated: 25 Jun 2018 5:14 AM GMT)
காரைக்கால் அம்மையார் கோவிலில் இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிளை அழைப்புடன் தொடங்குகிறது.
இறைவனின் திருவாயால் ‘அம்மையே‘ என்றழைக்கப்பட்ட பெருமை மிக்கவர் காரைக்கால் அம்மையார். இவர் காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில்கொண்டு அருள்பாலித்து வருகிறார். அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு, ஆண்டுதோறும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிளை அழைப்புடன் தொடங்குகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ஸ்ரீ பரமதத்தர் செட்டியாருக்கும், ஸ்ரீ புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறகிறது.
27-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவர் மூர்த்திக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்கு சிவபெருமான் சிவனடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
அந்த சமயத்தில் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிளை அழைப்புடன் தொடங்குகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ஸ்ரீ பரமதத்தர் செட்டியாருக்கும், ஸ்ரீ புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறகிறது.
27-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவர் மூர்த்திக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்கு சிவபெருமான் சிவனடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
அந்த சமயத்தில் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X