என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெண்ணாடம் பிரளயகாளேஸ்வரர் கோவிலில் அப்பர் திருவிழா
Byமாலை மலர்5 May 2017 7:50 AM GMT (Updated: 5 May 2017 7:50 AM GMT)
பெண்ணாடம் பிரளய காளேஸ்வரர் கோவிலில் அப்பர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெண்ணாடத்தில் பிரசித்தி பெற்ற பிரளயகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் 5-வது நாள் அப்பர் திருவிழா கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா பிரளயகாளேஸ்வரர் கோவிலில் கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
5-வது நாளான நேற்று கோவிலில் அப்பர் சுவாமி திருவிழா கொண்டாடப்பட் டது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு திரவியபொடி, பால், தயிர், இளநீர், மூவகை பழங்கள், சந்தனம் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை கொண்டு அப்பருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கைலாய வாத்தியம் முழங்க அப்பர் தேர் வீதிஉலா மாடவீதிகள் வழியாக வந்து தேரடியில் நிறைவடைந்தது.
இதில் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 8-ந் தேதி (திங்கட் கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா பிரளயகாளேஸ்வரர் கோவிலில் கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
5-வது நாளான நேற்று கோவிலில் அப்பர் சுவாமி திருவிழா கொண்டாடப்பட் டது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு திரவியபொடி, பால், தயிர், இளநீர், மூவகை பழங்கள், சந்தனம் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை கொண்டு அப்பருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கைலாய வாத்தியம் முழங்க அப்பர் தேர் வீதிஉலா மாடவீதிகள் வழியாக வந்து தேரடியில் நிறைவடைந்தது.
இதில் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 8-ந் தேதி (திங்கட் கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X