என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்

X
ஆகாசராயர் கோவிலுக்கு, மண்ணால் செய்யப்பட்ட குதிரையை சுமந்து நடந்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
லிங்கேசுவரர் கோவில் திருவிழா: மண் குதிரையை சுமந்து வந்து ஆகாசராயருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
By
மாலை மலர்22 April 2017 8:17 AM GMT (Updated: 22 April 2017 8:17 AM GMT)

அவினாசி லிங்கேசுவரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மண் குதிரையை சுமந்து வந்து ஆகாசராயருக்கு நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினார்கள்.
அவினாசிலிங்கேசுவரர் கோவில் திருவிழா வருகிற 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவை முன்னிட்டு அவினாசி அருகே உள்ள சின்ன கருணைப்பாளையத்திலிருந்து, அவினாசி மங்கலம் ரோட்டில் உள்ள ஊர்க்காவல் தெய்வமான ஆகாசராயர் கோவிலுக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட குதிரையை சுமந்து கொண்டு நடந்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதற்காக சின்ன கருணைப்பாளையத்தில் இருந்து களிமண்ணால் செய்யப்பட்ட குதிரையை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்தனர். அப்போது தாரை, தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து, களி மண்ணால் செய்யப்பட்ட குதிரையை சுமந்து கொண்டு, சின்ன கருணைப்பாளையத்திலிருந்து பக்தர்கள் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஊர்க்காவல் தெய்வமான ஆகாசராயர் கோவிலுக்கு வந்தனர்.
குதிரையை சுமந்து வரும் ரோட்டில் தண்ணீர் ஊற்றி பொதுமக்கள் வரவேற்றனர். கொளுத்துகின்ற வெயிலில் குதிரையை சுமந்து சென்ற பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் நீர் வழங்கப்பட்டது. பின்னர் ஆகாசராயருக்கு அபிஷேகம், அலங்காரம், மாகாதீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் கலந்து கொண்டனர்.
இதற்காக சின்ன கருணைப்பாளையத்தில் இருந்து களிமண்ணால் செய்யப்பட்ட குதிரையை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்தனர். அப்போது தாரை, தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து, களி மண்ணால் செய்யப்பட்ட குதிரையை சுமந்து கொண்டு, சின்ன கருணைப்பாளையத்திலிருந்து பக்தர்கள் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஊர்க்காவல் தெய்வமான ஆகாசராயர் கோவிலுக்கு வந்தனர்.
குதிரையை சுமந்து வரும் ரோட்டில் தண்ணீர் ஊற்றி பொதுமக்கள் வரவேற்றனர். கொளுத்துகின்ற வெயிலில் குதிரையை சுமந்து சென்ற பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் நீர் வழங்கப்பட்டது. பின்னர் ஆகாசராயருக்கு அபிஷேகம், அலங்காரம், மாகாதீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
