search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாதி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்த போது எடுத்த படம்.
    X
    சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாதி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்த போது எடுத்த படம்.

    முப்பிடாதி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்

    சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாதி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சுரண்டை சிவகுருநாதபுரம் இந்துநாடார் உறவின்முறை கமிட்டிக்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் இரவில் சிறப்பு பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு, வில்லிசை, இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    7-ம் நாள் விழாவில் இரவில் பாட்டு கச்சேரி, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்பிடாதி அம்மன் வீதிஉலா வருதல், 8-ம் நாள் விழாவில் வில்லிசை, அம்மனுக்கு சிறப்பு பூஜை, மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்டவைகள் நடந்தன.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான நேற்று நடந்தது. மாலை 3 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேர் முப்பிடாதி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு கீழரதவீதி, செங்கோட்டை ரோடு வழியாக சிவகாமசுந்தரி சமேத சிவகுருநாதர் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு மேற்குரதவீதி, வடக்குரதவீதி வழியாக மீண்டும் கோவில் வளாகத்தை சுற்றி தேர் நிலைக்கு வந்தது. இதில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மெல்லிசை கச்சேரி நடந்தது.

    இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூம்பல்லக்கு சப்பரத்தில் முப்பிடாதி அம்மன் எழுந்தருளி சிவகுருநாதர் கோவிலுக்கு சென்று அம்பாள் ஊஞ்சல் காட்சி, வாணவேடிக்கை நடக்கிறது.

    ஏற்பாடுகளை சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×