search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தேரோட்டம் 8-ந்தேதி நடக்கிறது
    X

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தேரோட்டம் 8-ந்தேதி நடக்கிறது

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தேரோட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூதப்பாண்டி பூதலிங்கசாமி- சிவகாமி அம்பாள் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைத்திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து திருவிழா நாட்களில் காலையில் சாமியும், அம்பாளும் வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலையில் சமய சொற்பொழிவு, இரவு சாமி வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தன.

    வருகிற 8-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு திருத்தேர்களில் விநாயகரையும், சாமியையும், அம்பாளையும் எழுந்தருளச்செய்தல், தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருப்பணி மன்றத்தாரின் நன்றி அறிவிப்பும், இரவு 7 மணிக்கு பக்தி மெல்லிசை நடக்கிறது.

    9-ந் தேதி காலை 10 மணிக்கு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு ஆராட்டு, இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்களும், திருப்பணிமன்ற நிர்வாகிகளும், உறுப்பினர்களும் செய்துள்ளனர்.
    Next Story
    ×