என் மலர்
ஆன்மிகம்

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் வருகிற 8-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராக சாமி கோவில் உள்ளது. இது வைணவத்தலங்களில் பிரசித்திபெற்றதாகும். இங்கு கடந்த 2012-ம் ஆண்டு கார்த்திகை மாதம் திருப்பணி தொடங்கியது. அரசு நிதி மற்றும் பக்தர்கள் வழங்கிய நன்கொடை மூலமாக ரூ.6 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன.
திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 13.8.2016 பங்குனி 5-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
4 வருடங்கள் ஆனதால் கடந்த 4 ஆண்டாக சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறவில்லை.
தற்போது மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு வருகிற 8-ந்தேதி (ஞாயிறு) காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.
4 ஆண்டுக்குப் பிறகு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சொர்க்க வாசல் திறப்பு விழாவில் கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 13.8.2016 பங்குனி 5-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
4 வருடங்கள் ஆனதால் கடந்த 4 ஆண்டாக சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறவில்லை.
தற்போது மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு வருகிற 8-ந்தேதி (ஞாயிறு) காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.
4 ஆண்டுக்குப் பிறகு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சொர்க்க வாசல் திறப்பு விழாவில் கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
Next Story






