என் மலர்
ஆன்மிகம்

சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு
சென்னிமலை முருகன் கோவிலில் இந்த வருட மார்கழி பூஜை இன்று மார்கழி 1ந்தேதி தொடங்கியது. தினமும் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் முழுவதும் மார்கழி மாத விழாக்குழு சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்த வருட மார்கழி பூஜை இன்று மார்கழி 1-ந் தேதி தொடங்கியது. தினமும் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இதை யொட்டி முன்னதாக காலை 5.30 மணிக்கு கோமாதா பூஜை நடைபெறுகிறது.
தெடர்ந்து முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இறுதிநாளில் பக்தர்கள் மேட்டுப்பாளையம் சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.
மார்கழி மாதத்தின் நிறைவு பூஜை அன்று உற்சவமூர்த்திகளுக்கு தீர்த்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் விஷேச பூஜைகள் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை மார்கழி மாத விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். மதி குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர்.
இந்த வருட மார்கழி பூஜை இன்று மார்கழி 1-ந் தேதி தொடங்கியது. தினமும் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இதை யொட்டி முன்னதாக காலை 5.30 மணிக்கு கோமாதா பூஜை நடைபெறுகிறது.
தெடர்ந்து முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இறுதிநாளில் பக்தர்கள் மேட்டுப்பாளையம் சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.
மார்கழி மாதத்தின் நிறைவு பூஜை அன்று உற்சவமூர்த்திகளுக்கு தீர்த்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் விஷேச பூஜைகள் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை மார்கழி மாத விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். மதி குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர்.
Next Story






