என் மலர்

    ஆன்மிகம்

    விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கொடியேற்றம் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி 10. 30 மணி வரை நடைபெற்றது.

    இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்துக்கு காப்பு கட்டப்பட்டது.அதனைத்தொடர்ந்து தினமும் சுப்பிரமணியர் , வள்ளி தெய்வானை சமேதராக சிங்கம், மயில், குதிரை, பறவை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி விராலிமலையின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 5ம் தேதி(சனிக்கிழமை) நடை பெறுகிறது. அதனைத் தொடர்ந்து 7ம் நாள் திருக்கல்யாணம், 8ம் நாள் வெள்ளிக்குதிரை வீதிஉலா, 9ம் நாள் விடையாத்தியுடன் கந்தசஷ்டி விழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் ஆர். பாண்டியராஜூ, மேற்பார்வையாளர் ரெ. மாரிமுத்து உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×