என் மலர்
ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம். (உள்படம்: நடராஜர்)
ஆனி திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்
ஆனி திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சன விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, மூலவருக்கு ரகசிய பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.
பின்னர் சாமி புறப்பாடாகி, கோவில் உட்பிரகார வலம் வந்து, தட்சணாமூர்த்தி சன்னதி முன்பு எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து, 21 படி வழியாக கீழவீதி தேர் மண்டபத்துக்கு சுவாமி வந்தடைந்தது. தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.
முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து, சுப்பிரமணியர் தேர் இழுக்கப்பட்டது.
காலை 9 மணிக்கு மூலவர் நடராஜர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அப்போது, பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். சிவகாமசுந்தரி மற்றும் சண்டிகேஸ்வரர் தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதியில் 5 தேர்களும் வலம் வந்தன. தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சாமி எழுந்தருளினார். பின்னர், அங்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
ஆனி திருமஞ்சன மகா தரிசன நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை மூலவர் ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் சாமி புறப்பாடாகி, கோவில் உட்பிரகார வலம் வந்து, தட்சணாமூர்த்தி சன்னதி முன்பு எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து, 21 படி வழியாக கீழவீதி தேர் மண்டபத்துக்கு சுவாமி வந்தடைந்தது. தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.
முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து, சுப்பிரமணியர் தேர் இழுக்கப்பட்டது.
காலை 9 மணிக்கு மூலவர் நடராஜர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அப்போது, பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். சிவகாமசுந்தரி மற்றும் சண்டிகேஸ்வரர் தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதியில் 5 தேர்களும் வலம் வந்தன. தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சாமி எழுந்தருளினார். பின்னர், அங்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
ஆனி திருமஞ்சன மகா தரிசன நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை மூலவர் ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
Next Story






