என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அமிர்தகடேஸ்வரர் கோவில் - திருக்கடம்பூர்
    X

    அமிர்தகடேஸ்வரர் கோவில் - திருக்கடம்பூர்

    அனைத்து நவக்ரஹ பரிகார ஸ்தலமாக விளங்கும் அமிர்தகடேஸ்வரர் கோவில்.
    இத்திருத்தலம் மிகவும் பாடல் பெற்ற திருத்தலம். மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் வந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது வரலாறு

    இறைவன் மற்றும் இறைவி:

    இந்த தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின் பெயர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் அம்பாளின் பெயர் வித்யா ஜோதி அம்மன் அருள்பாலிக்கிறார்.

    நடை திறக்கும் நேரம்:

    இந்த கோவிலானது காலை 6.00 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் இயங்கும்.

    கோவிலில் சிறப்பு:

    இந்த கோயிலில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அமைந்துள்ளார். இத்திருகோவிலில் மற்றொரு சிறப்பாக உள்ளது சூரிய கதிர்கள் வருடாவருடம் பங்குனி மாதம் அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் சூரிய கதிர்கள் இறைவன் மீது விழும். இந்த திருக்கோவில் முற்றிலும் கற்களால் ஆன கோவில் ஆகும். இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் கல் தேரில் குதிரை மீது அமர்ந்துள்ளார்.

    ஸ்தல வரலாறு:

    இந்த கோவிலில் உள்ள வரலாறாக கூறப்படுவது தேவர்களும் இந்திரர்களும் தங்கள் தவறை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை பயன்படுத்தும் விதமாக உள்ள கோயில் ஆக உள்ளது. தேவர்களும், இந்திரர்களும் இந்த சிவன் கோவிலில் வந்து வழிபட இருந்தனர். அப்போது அங்கிருந்த திருத்தேரை நகர்த்த முடியாமல் இருந்தது. அதற்கு உதவி செய்யும் வகையில் விநாயகர் வந்தார். விநாயகர் கூறியதாவது நான் இந்த தேரை நகர்த்த வேண்டுமெனில் ஒரு கோடி லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறினார்.

    அதற்கு இந்திரனும் சம்மதித்தார். அந்த முயற்சியில் தோற்றுவிட்டார். உடனே ஆயிரம் முறை லிங்கத்தின் பெயரை ஜெபித்தார். அப்போது ருட்ரகோடீச்வர் லிங்கம் தோன்றி நான் இந்த தேருக்கு பின்னால் நிற்பதாக கூறியது. அந்த லிங்கம் தான் அமிரித்தகடேஸ்வரர் திருத்தலம். தினமும் இந்திரன் வந்து பூஜை செய்த தலமாக இந்த கோயில் உள்ளது.

    இக்கோவில் சிறப்பு:

    இந்த கோவிலில் மட்டற்று சிறப்பாக கருதப்படுவது நவக்ரஹ தோஷம். இந்த கோயிலில் சினுக்கு நவகிரஹன்களுக்கு உரிய வண்ணமே சிவபெருமானிற்கு சாற்றப்படுகிறது. இந்த கோவிலில் தான் அருணகிரி நாதர் முருகபெருமானுக்கு திருப்புகழை பாடி உள்ளார்.

    இந்த கோயிலில் விநாயகர், முருகர், அம்பாள், நடராஜர் ஆகியோர் உள்ளனர். மேலும் இந்த தளத்தில் ராஜா கோபுரங்கள் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் சரஸ்வதி, அம்பாள், துர்கை ஆகியோர் உள்ளனர். இந்த கோவிலில் கஜ முக வாகனத்தோடு கஜ லக்ஷ்மி அமைந்துள்ளார் .

    மேலும் இந்த கோயிலில் மிக சிறப்பாக கருதப்படுவது ரிஷப வாகனம் பத்து கைகளுடன் காட்சி அளிக்கிறது. அந்த காட்சியை பூத கணங்களும், கந்தர்வர்களும் காண்பது போன்று அமைந்துள்ளது. இந்த கோயிலிலும் பிரதோஷ தினங்களிலும் பவுர்ணமி நாளிலும் மிக சிறப்பாக பூஜை நடத்தபடுகிறது.

    எப்படி செல்வது:

    இந்த திருத்தலதமானது காட்டு மன்னர் கோயிலில் இருந்து அயிந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இந்த தலம் கொள்ளிட ஆற்றங்கரையில் உள்ளது. இந்த கோவிலுக்கு காட்டு மன்னார் கோயிலில் நிறைய பேருந்துகள் உள்ளன.
    Next Story
    ×