search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    வேண்டுதல்களை நிறைவேற்றும் திருச்செந்தூர் திருபுகழ்

    திருச்செந்தூர் முருகனுக்கு உகந்த திருபுகழை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். கோவில் செல்ல முடியாதவர்கள் வீட்டில் திருச்செந்தூர் முருகன் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.
    உருக்கம் பேசிய நீலியர் காசுகள்
    பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்
    உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் ...... மதியாதே

    உரைக்கும் வீரிகள் கோளர வாமென
    வுடற்றுந் தாதியர் காசள வேமனம்
    உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் ...... புரிவேனோ

    அருக்கன் போலொளி வீசிய மாமுடி
    யணைத்துந் தானழ காய்நல மேதர
    அருட்கண் பார்வையி னாலடி யார்தமை ...... மகிழ்வோடே

    அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
    வடிப்பந் தானென வேயெனை நாடொறும்
    அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட ...... னினிதாள்வாய்

    இருக்குங் காரண மீறிய வேதமும்
    இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள்
    இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ ...... முடன்மேவி

    இலக்கந் தானென வேதொழ வேமகிழ்
    விருப்பங் கூர்தரு மாதியு மாயுல
    கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா

    திருக்குந் தாபதர் வேதிய ராதியர்
    துதிக்குந் தாளுடைய நாயக னாகிய
    செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் ...... மருகோனே

    செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
    கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ்
    திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் ...... பெருமாளே.
    Next Story
    ×