என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருஷ்டி, தீவினைகள் விலகும் ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்
    X

    திருஷ்டி, தீவினைகள் விலகும் ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்

    செல்வவளம் உண்டாக, பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலக இந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
    சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||

    இந்த மந்திரத்தை ஜெபித்து வரக் குடும்பத்தில் அமைதி, மனநிம்மதி உண்டாகும். புதன்கிழமை புதன் ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும். தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.
    Next Story
    ×