search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
    X
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

    இந்த வார விசேஷங்கள் 17.3.2020 முதல் 23.3.2020 வரை

    மார்ச் 17-ம் தேதியில் இருந்து மார்ச் 23-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    17-ந்தேதி (செவ்வாய்) :

    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளி திருப்பல்லக்கிலும், சுவாமி- தாயாருடன் வெள்ளி யானை வாகனத்திலும் பவனி.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, கோவர்த்தனகிரிபந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரக் காட்சி.
    * திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் காலை அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் புறப்பாடு.
    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    18-ந்தேதி (புதன்) :

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி பஞ்சமுக அனுமன் வாகனத்தில், ராமர் திருக்கோலமாய் காட்சியருளல்.
    * திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் திருவீதி உலா.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் இரவு புன்னை மர அலங்கார படிச்சட்டத்தில் பவனி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி- அம்பாள் இருவருக்கும் திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    19-ந்தேதி (வியாழன்) :

    * திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் வடலூர் சப்பரத்திலும், இரவு தங்கக் குதிரை வாகனத்திலும் வீதி உலா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, கண்ட பேரண்ட பட்சிராஜன் அலங்காரமாய் காட்சி தருதல்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கில் பவனி, வெண்ணெய் தாழி சேவை, இரவு சுவாமி வெள்ளிக் குதிரையிலும், தாயார் அலங்கார * படி சட்டத்திலுமாக ஆற்றங்கரையில் வேடர்பறி உற்சவம்.
    * மேல்நோக்கு நாள்.

    20-ந்தேதி (வெள்ளி) :


    * சர்வ ஏகாதசி.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை பல்லக்கில் பவனி, இரவு ராஜாங்க அலங்காரம், புஷ்பப் பல்லக்கில் பவனி.
    * திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் கோவிலில் ரத உற்சவம்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், தேசிகரோடு திருத்தேருக்கு எழுந்தருளல், இரவு மூலவருக்கு புஷ்பாங்கி சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    21-ந்தேதி (சனி) :


    * சனிப் பிரதோஷம்.
    * திருநெல்வேலி டவுண் கரிய மாணிக்கப் பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
    * உப்பலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சப்தாவரணம், சுவாமி- அம்பாள் புறப்பாடு.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரிஷி முக பர்வதம், பட்டாபிஷேக திருக்கோலமாய் காட்சி தருதல்.
    * திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் தீர்த்தவாரி.
    * மேல்நோக்கு நாள்.

    22-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * மாத சிவராத்திரி.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரம்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம், இரவு சுவாமி- தாயார் புஷ்பக விமானத்தில் பவனி.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில், அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    23-ந்தேதி (திங்கள்) :

    * அமாவாசை.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி தங்க சூரியப் பிரபையில் பவனி, வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சி அருளல்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம், மாலை புஷ்ப யாகம், இரவு சுவாமி- தாயார் அலங்காரப் படிச் சட்டத்தில் பவனி.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×