search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிறிஸ்துமஸ் பண்டிகை
    X
    கிறிஸ்துமஸ் பண்டிகை

    இந்த வார விசேஷங்கள் 24.12.2019 முதல் 30.12.2019 வரை

    டிசம்பர் 24-ம் தேதியில் இருந்து டிசம்பர் 30-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    24-ந்தேதி (செவ்வாய்) :

    * மாத சிவராத்திரி.
    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (புதன்) :

    * கிறிஸ்துமஸ் பண்டிகை.
    * அமாவாசை.
    * அனுமன் ஜெயந்தி.
    * நாமக்கல், சுசீந்திரம் ஆலயங்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனை.
    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
    * ஏரல் அருணாச்சல சுவாமிகள் திருவிழா.
    * சமநோக்கு நாள்.

    26-ந்தேதி (வியாழன்) :

    * மதுரை கூடலழகர் சன்னிதியில் பெரியாழ்வார் வென்ற கிளி விலாசம் எழுந்தருளி, பரத்துவ நிர்ணயம் செய்தருளல். கருடோற்சவம்.
    * திருவரங்கம் நம்பெருமாள், திருநெடுதாண்டகம், பெருஞ்சேரி வாகீஸ்வரர் கோவில்களில் சுவாமி பவனி.
    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    27-ந்தேதி (வெள்ளி) :

    * சகல விஷ்ணு ஆலயங்களிலும் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் வேதபிரான்பட்டர் திரு மாளிகை பச்சை பரப்பி, கடாசித்து பெரிய பெருமாள், கருடன் பட்டர் பிரான் திருப்பல்லாண்டு தொடக்கம்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.
    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்

    28-ந்தேதி (சனி) :

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மனுக்கு திருமஞ்சன சேவை.
    * திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை.
    * மேல்நோக்கு நாள்.

    29-ந்தேதி (ஞாயிறு) :

    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காலிங்க நர்த்தன திருக்கோலக் காட்சி.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் சேர்த்தியில் வேணுகான கண்ணன் திருக்கோலமாய், பல்லக்கில் கன்றால் விளா எறிந்த திருக்கோலக் காட்சி.
    * மதுரை கூடலழகா், திருமோகூர் காளமேகப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.
    * மேல்நோக்கு நாள்.

    30-ந் தேதி (திங்கள்) :

    * சதுர்த்தி விரதம்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், ஆண்டாள் திருக்கோலமாய் பல்லக்கில் வீணை மோகினி அலங்காரம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் -ரெங்கமன்னார், திருவரங்கம் நம் பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கோதண்ட ராமர் திருக்கோலமாய் காட்சி தருதல்.
    * மேல்நோக்கு நாள்.
    Next Story
    ×