search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துர்க்கை
    X
    துர்க்கை

    இந்த வார விசேஷங்கள் 24.9.2019 முதல் 30.9.2019 வரை

    செப்டம்பர் 24-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    24-ந் தேதி (செவ்வாய்) :

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    * திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    25-ந்தேதி (புதன்)

    * சர்வ ஏகாதசி.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    26-ந்தேதி (வியாழன்) :


    * பிரதோஷம்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    * கீழ்நோக்கு நாள்.

    27-ந்தேதி (வெள்ளி) :

    * மகாளய கேதார விரதம்.
    * மாத சிவராத்திரி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    28-ந்தேதி (சனி) :

    * மகாளய அமாவாசை.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.
    * திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல்.
    * மேல்நோக்கு நாள்.

    29-ந்தேதி (ஞாயிறு) :

    * நவராத்திரி ஆரம்பம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு லட்சார்ச்சனை ஆரம்பம்.
    * சகல சிவன் கோவில்களிலும் நவராத்திரி தொடக்கம்.
    * மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு தர்பார் காட்சி.
    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், அருப்புக்கோட்டை சவுடாம்பிகை, கழுகுமலை முருகன், மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், மைசூர் சாமுண்டீஸ்வரி ஆகிய தலங்களில் நவராத்திரி ஆரம்பம்.
    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்காரக் காட்சி.
    * சமநோக்கு நாள்.

    30-ந்தேதி (திங்கள்) :

    * திருப்பதி ஏழுமலையான், தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், நாட்டரசன்கோட்டை எம்பெருமாள், குணசீலம் பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார தரிசனம்.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×