என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
குரு பகவானை விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள், நேரம்
- குரு பகவானுக்கு உரிய நாளாகிய வியாழக்கிழமை விரதம் இருப்பது சிறப்பானது.
- மஞ்சள் நிற ஆடையைத் தானம் செய்யலாம்.
குரு பகவானை விரதம் இருந்து வழிபாடு செய்வதற்குக் குருபகவான் உச்சம் பெறும் ஆடி மாதமும், ஆட்சி பெறும் மார்கழி, பங்குனி மாதங்களும், குரு நட்சத்திரங்கள் ஆகிய விசாகம், புனர்பூசம், பூரட்டாதி வியாழக்கிழமைகளில், குரு ஓரையில் வழிபட்டு, பரிகாரம் செய்வது மிக, மிகச் சிறப்பாகும்.
வியாழக்கிழமையில் குரு ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் ஆகும்.
குரு கிரக பரிகாரங்கள்
வியாழபகவானுக்கு உரிய நாளாகிய வியாழக்கிழமை விரதம் இருந்து மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்தும், குருபகவானுக்கு மஞ்சள் நிற ஆடையாலும், சரக்கொன்றை, முல்லை மலர்களாலும் அலங்கரித்தும் வழிபட வேண்டும். அரசமர சமீத்து கொண்டு தூபம் காட்ட வேண்டும். கடலைப் பொடி சாதம், வேர்க்கடலைக் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் இவற்றை குரு பகவானுக்கு நிவேதனம் செய்து, மற்றவர்களுக்குத் தானம் செய்திடல் வேண்டும்.
மஞ்சள் நிற ஆடையைத் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்குத் தானம் செய்து விட வேண்டும். குரு பகவானின் ஆதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் இவர்களை வழிபட்டாலும் குரு மகிழ்வார். குரு பகவானை, அடாணா ராகத்தில் குருபகவானின் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
ஜாதகத்தில் குரு பலவீனமுற்றோ, தோஷமுற்றோ இருந்தால், நவமி அன்று சண்டிஹோமம் செய்ய சிறப்பாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்