என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
கோடி நன்மை தரும் குரு: விரதம் இருப்பது எப்படி?
- புத்திர பாக்கியத்தை அருள்பவர் குருதான்.
- குருஹோரை எனப்படுவது எல்லாக் காரியங்களும் ஏற்றது.
குணமிகு வியாழகுரு பகவானே!
மணமுடன் வாழ மகிழ்வுட னருள்வாய்!
பிரகஸ்பதி வியாழப் பரதகுருநேசா!
கிரக தோஷமின்றிக் காத்தருள் வாயே!
உலகெங்கும் இறையருள் மலர்ந்திருப்பினும் இறைவன் சிறப்புடன் குடியிருப்பது நமது தென்னாடாகும் என்பது மாணிக்கவாசகர் அருள்வாக்கு. சிவபெருமானின் பல வடிவங்களில் குருவடிவம் தட்சிணா மூர்த்தியாகும். தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கும் தட்சிணாமூர்த்தியை தொழுபவர்களுக்கு எமபயத்தைப் போக்கி ஞானத்தை வழங்குகிறார்.
ஆகமவிதிப்படி குருபகவான் நவக்கிரக பீடத்தில் சூரியனுக்கு நேர் எதிராக கிழக்கு நோக்கி பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளார். குரு திசை 16 வருடம். தனுசு மீனராசிக்கதிபதி. நிலம், புகழ், கீர்த்தி, வாக்கு வன்மை வேண்டுவோர் தட்சிணாமூர்த்தியை அல்லது குருவைப் பூஜித்தாலும், மஞ்சள் நிற வஸ்திரம் தானம் செய்தாலும் தங்கம், புஷ்பராகம் இவைகளை அணிந்தாலும், கடலை தானம் செய்தாலும், குருவார விரதமிருந்தாலும், தட்சிணாமூர்த்தி தோத்திர பாராயணம், குருத்தல வழிபாடு செய்தாலும், குரு தோஷம் நிவர்த்தியாகும்.
பலன்கள்: தன்னை வழிபடுவோர்க்கு பிறரை வணங்காத உயர் பதவியும், திருமணம், நீதி, மனமகிழ்ச்சி, புத்திர பேறு, செல்வம், நன்மதிப்பு, சுகவாழ்க்கை ஆகியவற்றைக் கொடுக்க வல்லவர். கிரக தோஷங்களைக் களைபவர். கோடி நன்மை தருபவர்.
வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து முல்லை மலர்கள் அணிவித்து குருவை வணங்க நம்மிடம் இருக்கும் படிவங்கள் மெல்ல மெல்ல விலகும்.
சுகமான வாழ்வு வாழ செல்வம் அவசியம். அந்தச் செல்வத்தை அருள்பவரே குருதான். எனவே குருவைத் தனகாரகன் எனக்கூறுவர்.
உலகில் பிறந்த அனைவரும் குழந்தை பாக்கியத்தை விரும்புவார்கள். புத்திர பாக்கியத்தை அருள்பவர் குருதான். எனவே குருவைப் புத்திரகாரகன் என்று கூறுவர்.
கால புருஷன் ஜாதகத்தில் ஒன்பதாம் படிவமாகிய பாக்யஸ் தானத்திற்கு ஆதிபத்தியம் பெறுவதால் பாக்கியத்தை அருள் பவரே குரு என்ற கருத்து நிலவி வருகிறது.
இது ஒரு ஆண் கிரகம். இரத்தம், பித்தப்பை, இரத்தக் குழாய்கள், இடுப்புக்கும், முழங்கால்களுக்கும் இடைப்பட்ட தொடைகள் ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெறுகிறார்.
உயர்தரக்கல்வி, சட்டம், நீதிமன்றம் நீதிபதி, வங்கிகள் கஜானா ஆகியவற்றிற்கும் காரகத்துவம் பெறுகிறார் குரு. அயல் நாட்டுச் சம்பந்தமான காரியங்களுக்கும் காரகத்துவம் வகிக்கிறார். ஏனெனில் 9, 12 படிவங்கள் அயல் நாட்டுடன் சம்பந்தப்பட்டவை. கால புருஷன் ஜாதகப்படி 9, 12க்குரியவர் குரு பகவான்.
குருஹோரை எனப்படுவது எல்லாக் காரியங்களும் ஏற்றது. இந்த ஹோரையின் போது எந்த வேலையையும் துவக்கலாம். சிபாரிசு, பண உதவி, வேலை விஷயம் தொழில் ஆரம்பம் போன்ற எந்தக்காரியத்திற்கும் இந்த ஹோரை பொருத்தமானது.
விஞ்ஞானத்தில் வியாழன்:
சூரியக் குடும்பத்திலேயே இதுதான் பெரியதொரு கிரகம் ஆகும். சூரியனிலிருந்து இது 778 மில்லியன் கி.மீ. தூரத்தில் உள்ளது. (484 மில்லியன் மைல்கள்) இது தன்னைத் தானே ஒரு தடவை சுற்றிவர 9 மணி 50 நிமிட நேரமும், சூரியனை ஒரு தடவை சுற்றி வர 11.8 வருடங்களும் எடுத்துக் கொள்கிறது. பூமியை விட இது 317 பங்கு கனமானது. சூரியனிலிருந்து மிகத் தொலைவில் உள்ளதால் வியாழன் கிரகம் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்