
அதேபோல், திரயோதசி திதி என்பது பிரதோஷ தினமாக, பிரதோஷ வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமை என்று சொல்லப்படுகிற சோமவாரத்தில் வருகிற பிரதோஷம், சுபிட்சத்தையும் முக்தியையும் கொடுக்கும். பிரதோஷத்தன்று விரதம் இருந்து சிவ பூஜை செய்தும் சிவனாரை தரிசித்தும் வேண்டிக்கொண்டால், வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் நடைபெறும்.
பிரதோஷத்தின் போது செய்யப்படுகிற தரிசனம், புத்தியைத் தெளிவாக்கும். ஞானத்தைக் கொடுக்கும். இன்று பிரதோஷம். சோமவார பிரதோஷம். மாலையில் சிவாலயம் செல்லுங்கள். சிவ தரிசனம் செய்யுங்கள். சிந்தையில் தெளிவையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் தந்தருளும்.
கூடுதலாக... மாசி மாத பிரதோஷம் விசேஷம். மாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம்தான். அற்புதமான இந்த மாசி மாதத்தில் திங்கட்கிழமையில் வருகிற பிரதோஷத்தில் விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்வோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!