
எனவே, ராகுகாலமும் பிரதோஷ வேளையும் இணைந்திருக்கும் நேரத்தில், நாம் சிவாலயத்துக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு, சிவ தரிசனம் செய்வது, கூடுதல் பலன்களைத் தரும். இந்தக்கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்வதன் மூலம், சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசியினருக்கும், சூரிய தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும். சூரிய தோஷம், ராகு-கேது தோஷம், கிரகண தோஷம் அகலும். தந்தை - மகன் உறவில் சுமுகம் ஏற்படும்.
இருதயம், வலது கண் தொடர்பான பிரச்சினைகள் விலகும். அரசு உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவியில் உள்ள பிரச்சினைகள் அகன்று பதவி நிலைக்கும். கூடுதல் பலன் கிடைக்க, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.