என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வியாழக்கிழமை விரதம் இருந்தால் திருமணத்தடைகள் அகலும்
    X
    வியாழக்கிழமை விரதம் இருந்தால் திருமணத்தடைகள் அகலும்

    வியாழக்கிழமை விரதம் இருந்தால் திருமணத்தடைகள் அகலும்

    குரு பலம் கூடி வந்தால்தான் திருமணம் முடியும். பொதுவாக கல்யாணக் கனவுகள் நனவாக, வியாழக்கிழமை விரதமிருந்து குரு பகவானை வழிபடுவது நல்லது.
    திருமண வயது வந்தும் சிலருக்கு திருமணம் முடிவாகாமல் தாமதப்படலாம். ‘வாழ்க்கைத் துணை அமையவில்லையே, வயதாகிக் கொண்டே போகின்றது, வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே’ என்று கவலைப்படுபவர்கள், பலன்தரும் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் மேற்கொண்டால் இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    திருமணஞ்சேரி வழிபாடு, தித்திக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும். சிறுவாபுரியில் உள்ள வள்ளிமணவாளப் பெருமான், தெய்வானையை முருகப்பெருமான் மணந்த இடமான திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டாலும் இல்லறம் நல்லறமாக முடியும்.

    இதுபோன்ற திருமணம் முடித்து வைக்கும் திருத்தலம் ஏராளமாக உள்ளது. நமது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தின் பலம் பார்த்து, அதற்குரிய தலத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால் மணமாலை சூடும் வாய்ப்பு விரைவில் வரும்.

    குரு பலம் கூடி வந்தால்தான் திருமணம் முடியும். எனவே, குருவிற்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம். வானவருக்கு அரசனான வளம் தரும் குருவுக்கு, பட்டமங்கலம், குருவித்துறை போன்ற இடங்களில் ஆலயங்கள் உள்ளன. பொதுவாக கல்யாணக் கனவுகள் நனவாக, வியாழக்கிழமை விரதமிருந்து குரு பகவானை வழிபடுவது நல்லது.
    Next Story
    ×