என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோமாதா விரத வழிபாடு
Byமாலை மலர்16 Jan 2020 7:58 AM GMT (Updated: 16 Jan 2020 7:58 AM GMT)
இன்று பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருந்து வந்திருக்கின்றன. விரதம் இருந்து கோ மாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
கோவில்கள் தோறும் காலை வேளையில் ‘கோ பூஜை’ செய்வது வழக்கம். பால் தரும் பசுக்களை, நாம் ‘கோ மாதா’ என்று அழைக்கிறோம். அதுமட்டுமல்ல அதுதரக் கூடிய மூன்றுவிதப் பொருட்களான பால், சாணம், கோமியம் ஆகியவை, நமக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பொருளாக அமைகின்றன என்று மருத்துவம் கூறுகிறது.
எனவே, வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது. பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்தும் தயாரிக்கப்படும் ‘பஞ்சகவ்யம்’ சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன. பசுவிற்கு சேவை செய்தால் பலவிதமான நன்மை களைப் பெறலாம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக ஐதீகம்.
அதனால்தான் காமதேனு வழிபாடு, பொங்கலின் மறுநாள் மாட்டுப் பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருந்து வந்திருக்கின்றன. கோ மாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கும், பால் தரும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாள்தான் மாட்டுப்பொங்கல். இன்று நம் வீட்டில் உள்ள கால்நடைகளை சுத்தப்படுத்தி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, பொங்கல் படைத்து வழிபாடு செய்வது வழக்கம். தமிழக கிராமங்களில் உறவினர்கள் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது, ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு போன்றவை இந்த நாளில்தான் நடத்தப்படும். ‘
மஞ்சு விரட்டு’ என்ற பெயருடைய ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிடைக்கும்.
எனவே, வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது. பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்தும் தயாரிக்கப்படும் ‘பஞ்சகவ்யம்’ சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன. பசுவிற்கு சேவை செய்தால் பலவிதமான நன்மை களைப் பெறலாம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக ஐதீகம்.
அதனால்தான் காமதேனு வழிபாடு, பொங்கலின் மறுநாள் மாட்டுப் பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருந்து வந்திருக்கின்றன. கோ மாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கும், பால் தரும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாள்தான் மாட்டுப்பொங்கல். இன்று நம் வீட்டில் உள்ள கால்நடைகளை சுத்தப்படுத்தி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, பொங்கல் படைத்து வழிபாடு செய்வது வழக்கம். தமிழக கிராமங்களில் உறவினர்கள் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது, ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு போன்றவை இந்த நாளில்தான் நடத்தப்படும். ‘
மஞ்சு விரட்டு’ என்ற பெயருடைய ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிடைக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X