search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துர்க்கைக்கு பெண்கள் வழிபாடு
    X
    துர்க்கைக்கு பெண்கள் வழிபாடு

    விரதமிருப்பது ஏன்?

    உணவின் மீது ஆசைப்படும் நாம், ஒரு நாளேனும் விரதமிருந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள்.
    ஆசைகளை விட்டொழித்தால் அமைதி காணலாம் என்பது முன்னோர் வாக்கு. உணவின் மீது ஆசைப்படும் நாம், ஒரு நாளேனும் விரதமிருந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள். அது இறைவனுக்கு உகந்த நாளாக இருப்பது உத்தமம் என்று கூறி அந்த விரதத்தை நாம் கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்கள். இதனால் இறையருளுக்கும் பாத்திரமாக முடிகின்றது. ஆரோக்கியத்திற்கும் வித்திடுகிறது. உடலுக்கு பலத்தையும் கொடுக்கின்றது.

    அன்றைய தினம் முழுவதும் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதால் அவைகள் புத்துணர்ச்சியும், பலமும் பெறுகின்றன. அதனால் உடல் ஆரோக்கியம் உருவாகின்றது. உடல் வியாதிகளை வெளியேற்றுகின்றது. விரதம் முடிந்து உண்ணும் பொழுது குடல் உறிஞ்சிகளால், அவை எளிதாக ஜீரணிக்கப்பட்டு செரிமானம் பூரணமாக நடைபெறுகிறது. இறைவனுக்காக விரதம் இருக்கும் நாட்களில், பசியைப் பற்றிச் சிந்திக்காமல் பரந்தாமனைப் பற்றியே சிந்திப்பது நல்லது.
    Next Story
    ×